நற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்

நற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்

என்னோடு தங்கும் ஆண்டவரே! உம்மை மறவாதிருக்க, நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.

என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க உமது பலம் எனக்குத் தேவை. என்னோடு தங்கும் ஆண்டவரே. எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை.

என்னோடு தங்கும் ஆண்டவரே. நீரே என் ஒளி. என்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் மூழ்கின்றேன். உமது சித்தம் எதுவென எனக்குத் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே. உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே.

என்னோடு தங்கும் ஆண்டவரே. இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லையென்றாலும் உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.     என்னோடு தங்கும் யேசு சுவாமி.

தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்கு தாரும் சுவாமி.         

என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு,உமது அருள், உமது சித்தம், உமது இதயம்,உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகின்றேன்.

மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை.ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன்.

இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy